20 டிசம்பர் 2024

லஜ்னத்து தய்யிபா மாணவியர் சொற்பயிற்சி மன்றம் 21.12.2024

📜📜📜📜📜
லஜ்னத்து தய்யிபா மாணவியர் சொற்பயிற்சி மன்றம்
📜📜📜📜📜

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஜமாத்துல் ஆகிர் பிறை 18 (21-12-2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக காலை 11:30 மணியளவில் 
 
🕌 அன்னை கதீஜா (ரலி) நிஸ்வான் அரபிக் கல்லூரி,
(ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாக சபை)
தெற்கு புதுத்தெரு, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

தலைமை: M. கதீஜா பீவி ஆலிமா கதீஜிய்யா அவர்கள்
(மக்தப் ஆசிரியை, அன்னை கதீஜா (ரலி) மக்தப் மதரஸா)

முன்னிலை: பேராசிரியைகள்,
அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக்கல்லூரி

🎙️கிராஅத்:*
M. நஜீரா
(ஹாஃபிழா மாணவி)

கீதம்: முதலாம் ஆண்டு ஆலிமா பயிலும் மாணவிகள்

🗒️வரவேற்புரை:
H. செய்யது ராபியா B.sc.,
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி) 

 🔖 🎙️மாணவிகளின் சொற்பொழிவு🎙️

M. ஜம்ருத் சுப்ஹானி ஆலிமா கதீஜிய்யா B.com.,
(ஹாஃபிழா மாணவி)

 தலைப்பு: குர்ஆனின் சிறப்பு

R. ஜீனத் ஆலிமா கதீஜிய்யா B.ed.,
(ஹாஃபிழா மாணவி)

தலைப்பு: *உறவுகளை பேணுதல்*

S. சம்சாத் ஆலிமா கதீஜிய்யா B.ed.,
(ஹாஃபிழா மாணவி)

தலைப்பு: இறைநம்பிக்கை
 
நன்றியுரை: A. ஆயிஷா சித்தக்கா
(முதல் வருட ஆலிமா மாணவி)

துஆ: K. ஆயிஷா பானு ஆலிமா கதீஜிய்யா B.sc nur.,
(ஹாஃபிழா மாணவி)

சிறப்பு துஆ:

பிரதி வாரம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சூரத்துல் கஹ்ப், சூரத்துல் யாசீன் மற்றும் ஸலவாத், திக்ரு ஓதி நிர்வாகிகள், மஹல்லாவாசிகள், ஜமாஅத்தார்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காகவும் உலக முஸ்லிகளின் பாதுகாப்பிற்காகவும் துஆ செய்யப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்.

துஆவுடன் 

ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாக சபை, முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அன்னை கதீஜா மகளிர் அரபிக் கல்லூரி தூத்துக்குடி

16 டிசம்பர் 2024

இளைஞர்களுக்கான போதை விழிப்புணர்வு கூட்டம்

இன்ஷா அல்லாஹ் எதிர் வரக்கூடிய 04.01.2025 சனிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின்
 தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் வைத்து,

இளைஞர்களுக்கான போதை விழிப்புணர்வு கூட்டம் நடக்க  இருக்கிறது.

மாநகரத்தின் அனைத்து  மஹல்லாவிலுமிருந்து  அதிகமான இளைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள 
முயற்சிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடு: 
தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபை 

10 நவம்பர் 2024

50 கோடி ஸலவாத் சமர்ப்பண விழா - தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியில்!

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமிஆ பள்ளிவாசல் வளாகத்தில் செயல்பட்டு வரும் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் மற்றும் மேற்காசிய நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் நீங்க அமைதி நிலவ வேண்டியும் உலக நன்மைக்காகவும் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டு அனைவரும் ஒற்றுமையுடன் வாழ 50 கோடி ஸலவாத் ஓதி இறைவனிடம் அபூர்வ துஆ வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா இம்தாதுல்லாஹ் ஹழ்ரத் தலைமை தாங்கினார்கள். துணை முதல்வர் மௌலானா அஸ்ரார் அஹமது ஹழ்ரத் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். 
பேராசிரியர் தாஜூத்தீன் ஹழ்ரத் கிராஅத் ஓதினார்கள். 

மாவட்ட அரசு காஜி  மௌலானா முஜீபுர் ரஹ்மான் ஹழ்ரத் , ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம்  மௌலானா அப்துல் அழீம் ஹழ்ரத் , இமாம் மௌலானா சதக்கத்துல்லாஹ் ஹழ்ரத், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இதில் காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா  செய்யது அப்துல் ரஹ்மான் தங்கள் ஹழ்ரத் அவர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என கண்ணீர் மல்க அபூர்வ துஆ ஓதினார்கள். 

ஜாமியா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் பி.மீராசா, செயலாளர் அல்ஹாஜ் M
S.F. ரஹ்மான், துணைத் தலைவர் அல்ஹாஜ் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் ஜனாப் இப்ராகிம் மூஸா, அரபிக் கல்லூரி பொருளாளர் சுலைமான், பேராசிரியர்கள் மௌலானா இஸ்மாயில் ஹழ்ரத், மௌலானா செய்யது அப்பாஸ்ஹழ்ரத், மௌலானா அப்துல் கனி ஹழ்ரத், கிரசன்ட் பள்ளி செயலாளர் முஹம்மது, உவைஸ், பொருளாளர் பீர்முகமது அசிம், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஆடிட்டர் ஜூபைர், 
முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏகே மைதீன் அர் ரஹ்மானியா நற்சேவை மன்ற செயலாளர் மீராசா, பொருளாளர் முகமது குட்டி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரபிக் கல்லூரி தலைவர் நவரங் சகாப்தின் நன்றி கூறினார்.

02 நவம்பர் 2024

மாதாந்திர பெண்கள் பயான் - நவம்பர் 2024

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்

மாதாந்திர பெண்கள் பயான்

இன்ஷா அல்லாஹ் ,
நாள் : 
02/11/24 சனிக்கிழமை

நேரம் : 
அசர் முதல் மஃரிப் வரை (4:45 pm to 6:00 pm)

இடம் : 
அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி, 
(சமுதாய நல கூடம்)
 தெற்குப் புதுத் தெரு

சிறப்புரை :
மௌலவி, ஹாபிஃழ்
அப்பாஸ் மஸ்லஹி ஃபாஜில் பாகவிஹஜ்ரத் அவர்கள் 
 (பேராசிரியர், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி)
தூத்துக்குடி 

 தலைப்பு :
 "குடும்பங்களின் ஒற்றுமைக்கு மாதர் குலத்தின் பங்கு"

நிகழ்ச்சி ஏற்பாடு:
ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாக சபை & மாநகர ஜமாஅத்துல் உலமா சபை 
 தூத்துக்குடி.

06 அக்டோபர் 2024

மீலாது பேரணி & மக்தப் பெருவிழா 2024

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை  நடத்தும்
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீலாது விழா & தூத்துக்குடி மாநகர அனைத்து மஹல்லா இணையும்
மீலாது பேரணி & மக்தப் பெருவிழா


முதல் நிகழ்வு : பேரணி


நாள்: ஹிஜ்ரீ 02.04.1446, (06.10.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4. மணி 

இடம் : ஜெய்லானி தெரு பீரப்பா பள்ளியிலிருந்து துவங்கி நூஹ் வலியுல்லாஹ் அப்பா தர்ஹா வரை காயல்பட்டினம் ஹாமிதியா பைத் சபாவுடன் பேரணி நடைபெறும்.


இரண்டாம் நிகழ்வு : மக்தப் பெருவிழா


நாள்: ஹிஜ்ரீ 02.04.1446, (06.10.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 5. மணி

இடம்: ஜாமியா பள்ளிவாசல் வளாகம்