10 ஜூலை 2022

தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபையின் சிறப்பான ஏற்பாட்டில், 
பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி சுற்றுவட்டார சுமார் 20 மஹல்லாக்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஜமாத்தினர்கள் பெருநாள் தொழுகையில் சிறப்பாக கலந்து கொண்டனர்.

சில ஜமாத்துகளிலிருந்து தக்பீர் முழங்கிக் கொண்டே சாலைகளில் நடந்து வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலவி அல்ஹாபிழ் சா.முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தீ அவர்கள் தலைமையில், தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாபிழ் K.A.அப்துல் அழீம் மஸ்லஹி, இமாம் மௌலவி அல்ஹாபிழ் அ.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஆகியோர் குத்பா மற்றும் தொழுகையை சிறப்பாக நடத்தினர். 

உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு 
மக்கள் சலாம் கொடுத்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி பாசத்தை பகிர்ந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஜாமியா பள்ளி நிர்வாக சபையின் மேலாளர் மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திறன் பட செய்திருந்தனர்.
அல்ஹம்து லில்லாஹ்.

08 ஜூலை 2022

பெருநாள் தக்பீர்


பெருநாள் தக்பீர்
துல்ஹஜ் பிறை ஒன்பது சுபுஹு தொழுகையில் இருந்து பிறை 13 அசர்வரை 
ஒவ்வொரு வக்து தொழுகைக்குப் பிறகும் ஆண்கள் சப்தமிட்டும் பெண்கள் சத்தம் குறைத்தும் தக்பீர் சொல்ல வேண்டும் 

07 ஜூலை 2022

துல்ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி - மன்பவுஸ் ஸலாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் முத்துநகரின் முத்தான கல்விக்கூடம் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி மனாருல் ஹுதா மாணவர் மன்றத்தின் சார்பாக 
துல்ஹஜ் மாத சிறப்பு நிகழ்ச்சியாக, 
கிராஅத் போட்டி மற்றும் சிறப்பு கருத்தரங்கம் 
மிக சிறப்பாக  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!!

04 ஜூலை 2022

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஈதுல் அழ்ஹா என்னும் ஹஜ்ஜுப் பெருநாள்
தொழுகை அறிவிப்பு

தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற ஜமாஅத்தார்களுக்கு...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நிகழும் சங்கையான ஹிஜ்ரி 1443ம் ஆண்டு துல்ஹஜ் பிறை 10
(10.07.2022) ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை 8.00 மணிக்கு

பாளையங்கோட்டை ரோடு, ஈத்கா தோட்டத்தில்
இன்ஷா அல்லாஹ்
ஈதுப் பெருநாள் தொழுகை நடைபெறும்.

ஆகையால் ஜமாஅத்தார்கள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வருகை தந்து காலை 8.00 மணிக்கு தொழுகையை துவக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெருநாள் அன்று காலை மழை இருப்பின் பெருநாள் தொழுகை
அந்தந்த மஹல்லா பள்ளிவாசல்களில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.


தங்கள் அன்புள்ள
M.Y. ஹைதர் அலி M.Sc., (நிர்வாக அதிகாரி, வக்ஃபு கண்காணிப்பாளர்)
ஜாமிஆ பள்ளிவாசல், 
 31-33, வ.உ.சி. சாலை. தூத்துக்குடி - 2. 
போன்: 2326103. 4210787

குறிப்பு :
1. தக்பீருடைய நாட்கள் துல்ஹஜ் பிறை 9 (09.07.2022) சனிக்கிழமை  சுப்ஹூலிருந்து பிறை 13 (13.07.2022) புதன்கிழமை அஸர் வரை.

2. பெண்களுக்கு வழக்கம் போல் தெற்குபுதுத் தெருவில் உள்ள ஜாமிஆ சமுதாய நலக்கூடத்தில் (அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி) காலை 9.00 மணிக்கு, இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெறும்.

3.துல்ஹஜ் பிறை 9 (09.07.2022] சனிக்கிழமைஅரஃபா தினத்தில் நோன்பு பிடிப்பது சுன்னத்தாகும்.

 4. வழமைபோல் தொழுகைக்கு தார்பாய் விரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜமாத்தார்கள் தங்கள் இல்லங்களிலே ஒழு செய்து, தங்களது விரிப்புகளை தொழுகைக்கு கொண்டு வருவது ஏற்றமாக இருக்கும்.



01 ஜூலை 2022

மாதாந்திர பெண்கள் பயான் - ஜாமிஆ மஹல்லா - ஜூலை 2022

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 



மாதாந்திர பெண்கள் பயான் 

இன்ஷா அல்லாஹ் ,

நாள் : 02-07-2022 சனிக்கிழமை

நேரம் : அசர் முதல் மஃரிப் வரை

இடம் : அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி
(சமுதாய நல கூடம்)
 தெற்குப் புதுத் தெரு, தூத்துக்குடி.