04 ஜூலை 2022

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஈதுல் அழ்ஹா என்னும் ஹஜ்ஜுப் பெருநாள்
தொழுகை அறிவிப்பு

தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற ஜமாஅத்தார்களுக்கு...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நிகழும் சங்கையான ஹிஜ்ரி 1443ம் ஆண்டு துல்ஹஜ் பிறை 10
(10.07.2022) ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை 8.00 மணிக்கு

பாளையங்கோட்டை ரோடு, ஈத்கா தோட்டத்தில்
இன்ஷா அல்லாஹ்
ஈதுப் பெருநாள் தொழுகை நடைபெறும்.

ஆகையால் ஜமாஅத்தார்கள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வருகை தந்து காலை 8.00 மணிக்கு தொழுகையை துவக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெருநாள் அன்று காலை மழை இருப்பின் பெருநாள் தொழுகை
அந்தந்த மஹல்லா பள்ளிவாசல்களில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.


தங்கள் அன்புள்ள
M.Y. ஹைதர் அலி M.Sc., (நிர்வாக அதிகாரி, வக்ஃபு கண்காணிப்பாளர்)
ஜாமிஆ பள்ளிவாசல், 
 31-33, வ.உ.சி. சாலை. தூத்துக்குடி - 2. 
போன்: 2326103. 4210787

குறிப்பு :
1. தக்பீருடைய நாட்கள் துல்ஹஜ் பிறை 9 (09.07.2022) சனிக்கிழமை  சுப்ஹூலிருந்து பிறை 13 (13.07.2022) புதன்கிழமை அஸர் வரை.

2. பெண்களுக்கு வழக்கம் போல் தெற்குபுதுத் தெருவில் உள்ள ஜாமிஆ சமுதாய நலக்கூடத்தில் (அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி) காலை 9.00 மணிக்கு, இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெறும்.

3.துல்ஹஜ் பிறை 9 (09.07.2022] சனிக்கிழமைஅரஃபா தினத்தில் நோன்பு பிடிப்பது சுன்னத்தாகும்.

 4. வழமைபோல் தொழுகைக்கு தார்பாய் விரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜமாத்தார்கள் தங்கள் இல்லங்களிலே ஒழு செய்து, தங்களது விரிப்புகளை தொழுகைக்கு கொண்டு வருவது ஏற்றமாக இருக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக