13 டிசம்பர் 2022

மாதாந்திர பெண்கள் பயான் - டிசம்பர் 2022

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மாதாந்திர பெண்கள் பயான்
இன்ஷா அல்லாஹ் ,
நாள் :  17/12/2022 சனிக்கிழமை
நேரம் :  அசர் முதல் மஃரிப் வரை (5:15 pm to 6:15)
இடம் : அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி,
(சமுதாய நல கூடம்) தெற்குப் புதுத் தெரு

சிறப்புரை :
 மௌலவி K.Aஅப்துல் அழீம் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்கள்
(தலைமை இமாம் ஜாமிஆ மஸ்ஜித் & முதல்வர் அன்னை கதீஜா மகளிர் அரபிக்கல்லூரி)


தலைப்பு:
 " பெண்களின் சிறப்பும் பொறுப்பும் "

ஜமாத்தார்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பெண்களை பயானுக்கு அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
     இப்படிக்கு
 மாநகர ஜமாஅத்துல் உலமா சபை & ஜாமிஆ பள்ளிவாசல் மஹல்லா
 தூத்துக்குடி.

06 டிசம்பர் 2022

மக்தப் மேம்பாட்டுத் திட்டம் - அன்னை கதீஜா மக்தப் - தூத்துக்குடி

 மக்தபை மேம்படுத்த காலத்தின் கட்டாயம் கருதி சில ஒழுங்குமுறைத் திட்டங்களை நம் மதரஸா முன் வைக்கிறது.

இது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்பொழுது நிறைய மாணவர்கள் மாணவிகள் தாய்மார்கள் என நம் மதரஸாவில்கூட்டம் அலைமோதுகிறது. அல்லாஹ்வின் அருளால் கியாமத் வரை இன்னும் சீரும் சிறப்புடனும் செயல்பட உங்கள் அனைவரின் துஆவுடன் இதை சமர்ப்பிக்கிறோம்.



பெற்றோர் ஆசிரியர் கூட்டம் - மக்தப் மேம்பாட்டுத் திட்டம்


 அஸ்ஸலாமு அலைக்கும்..

26.11.2022 சனி மாலை 5 மணி அளவில் நமது அன்னை கதீ
ஜா மதரஸா
வில்
பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.

அது சமயம் நிஸ்வான் & மக்தப் மதரஸாவின் முதல்வர் மௌலானா அல்ஹாபிழ்  K.A.  அப்துல் அழீம் மஸ்லஹி  ஹழ்ரத்  அவர்கள் தலைமை தாங்கி மதரஸாவின் முக்கியத்துவம் குறித்து தலைமையுரை நிகழ்த்தினார்கள்.

ஆரம்பமாக, மதரஸாவின் பேராசிரியை ஆலிமா ஆயிஷா சித்தீக்கா கதீஜிய்யா அவர்கள் திருமறை ஓதி துவக்கி வைக்க, 

மதரஸாவின் பேராசிரியை ஆலிமா பாத்திமுத்து ஜஹ்ரா கதீஜிய்யா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி துவக்கவுரையும் நிகழ்த்தினார்கள்.

மௌலவி அல்ஹாபிழ்  A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஹழ்ரத்  Projector  மூலம் விளக்கப்பட காட்சிகள் காண்பித்து Organized Makthab சீராக சிறப்பாக செயல்படும் விதம் குறித்து தெளிவு படுத்தினார்கள். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை கதீஜா நிஸ்வான் மற்றும் மக்தப் ஆலிமாக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

பெற்றோர்களும் பிள்ளைகளும் கூடுதலான அளவில் ஆர்வத்தோடு கலந்து கொண்டது அளவிலா சந்தோஷம்.

அல்ஹம்துலில்லாஹ் !


18 நவம்பர் 2022

5 கோடி ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ் - மன்பவுஸ்ஸலாஹ் - தூத்துக்குடி



உலக மக்கள் அனைவரும் பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர் மற்றும் பேராபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற்று உலகம் முழுவதும் நிம்மதியும் சமாதானமும் நிலவ வேண்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது

5 கோடி ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ் 
நாள்: 04/12/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில்
இடம்: மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி

நீங்கள் ஓதிய ஸலவாத்தின் எண்ணிக்கைகளை கீழ்காணும் "வாட்ஸ்அப்" எண்களில் ஏதேனும் ஒன்றிற்கு அனுப்பி வைத்து மஜ்லிஸில் தாங்களும் பங்கு பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

22 அக்டோபர் 2022

தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் முப்பெரும் விழா

தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் 

மீலாது விழா, 

சமய நல்லிணக்க விழா மற்றும் 

போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்


நாள் : ஹிஜ்ரி 1444 ரபீவுல் அவ்வல் பிறை 25 (22.10.2022) சனிக்கிழமை

நேரம்: மாலை 5.00 மணி

இடம்: அறிஞர் அண்ணா மண்டபம் அருகில், சத்திரம் தெரு, தூத்துக்குடி.

05 அக்டோபர் 2022

ஐந்தே மாதங்களில் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த சாதனை மாணவி

ஐந்தே மாதங்களில் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த
 💫 சாதனை மாணவி💫

இராமநாதபுரம் மாவட்டம் 
சிறுகம்பையூர் கிராமத்தைச் சார்ந்த 

N.M.S.நெய்னா முஹம்மது அவர்களின் மகள்
N.ஆயிஷா சித்திக்கா
(வயது 18)

இவர் தூத்துக்குடி மாவட்டம் 
பேட்மாநகரம் நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரியில்
 ஹிஃப்ழு பிரிவில் ஓதி வருகிறார்...

13 ஆகஸ்ட் 2022

அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி - சிறப்பு பயான் நிகழ்ச்சி

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி...
கண்ணியத்திற்குரிய ஜமாத்தார்களுக்கு....
இன்ஷா அல்லாஹ் நமது அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரியி (சமுதாய நலக்கூடத்தி) ல் வைத்து இன்று முதல் ...
வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5:15  மணி வரை 
அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரியினுடைய

 ஆலிமா பெருமக்கள் மற்றும் பட்டம் பெரும் மாணவிகள் சார்பாக
 

10 ஆகஸ்ட் 2022

ஜூலை மாத வெற்றியாளர்கள் - மக்தப் மதரஸா

 அஸ்ஸலாமு அலைக்கும்..

நமது ஜாமியா பள்ளி மக்தப் மதரஸாவில் கடந்த ஜூலை மாதம் வருகை மற்றும் மாதத் தேர்வுகளில் சிறப்பான இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி உற்சாகப் படுத்தப்பட்டனர்.

07 ஆகஸ்ட் 2022

ஆஷூரா சிறப்புக் கருத்தரங்கம்

ஆஷூரா சிறப்புக் கருத்தரங்கம்
 
இன்ஷா அல்லாஹ் 08/08/2022
திங்கட் கிழமை இரவு 9:00 மணியளவில் நமது மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி மனாருல் ஹுதா மாணவர் மன்றத்தின் சார்பாக ஆஷூரா  தின சிறப்புக் கருத்தரங்கம்

மிகச் சிறப்பான முறையில் நடை பெறவுள்ளது. அதிலே ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

ஆஷூரா தின சிறப்பு பட்டிமன்றம்

இன்ஷா அல்லாஹ் 07/08/2022
ஞாயிற்றுக்கிழமை இரவு 9:00 மணியளவில் நமது மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி மனாருல் ஹுதா மாணவர் மன்றத்தின் சார்பாக 
ஆஷூரா  தின சிறப்பு பட்டிமன்றம்

மிகச் சிறப்பான முறையில் நடை பெறவுள்ளது. அதிலே ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

இப்படிக்கு,
மனாருல் ஹுதா மாணவர் மன்றம்,
மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி.

02 ஆகஸ்ட் 2022

பெண் ஜனாஸா குளிப்பாட்டு முறை பயிலரங்கம்

 




அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் 
 02/08/2022 அன்று தூத்துக்குடி மதர் பைரோஸ் டிரஸ்ட் மற்றும் மாநகர ஜமாத்துல் உலமா சபை இணைந்து நடத்திய பெண்கள் ஜனாஸா குளிப்பாட்டும் முறை  பயிலரங்கம் மிகச் சிறப்பான முறையில் நடந்தேறியது. அதில் நம்முடைய மாநகரத்திலிருந்து 185 பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

துவக்க உரை மற்றும் வரவேற்புரையை ஜாமியா பள்ளிவாசலுடைய தலைமை இமாம் அப்துல் அழீம் ஹஜரத் அவர்கள் நிகழ்த்த 

ஜனாஸா குளிப்பாட்டு முறை பற்றி பி & டி காலனி  மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் ஹஜரத் அவர்கள் உரையாற்ற

 பெண்கள் ஹெல்த் கேர் சம்பந்தமாக மதர் பைரோஸ் ட்ரெஸ்ட்டின் மூத்த நிர்வாகி டாக்டர் நசீர் அவர்கள் உரை மற்றும் நன்றியுரை நிகழ்த்தினார்கள்

அன்னை கதீஜா மகளிர் அரபிக் கல்லூரியின்  பேராசிரியைகள் உஸ்தாதா ஷிபானா, உஸ்தாதா ஸைபுன்னிஸா ஆகியோர்கள் ஜனாஸா குளிப்பாட்டும் முறை பற்றி செயல்முறை விளக்கம் தர,

 மாநகர ஜமாதுல் உலமா சபையின் செயலாளர் சம்சு ஹஜரத் மற்றும் ஜாமியா பள்ளிவாசல் இமாம் சதகத்துல்லாஹ் ஹஜரத் மற்றும் ரஹ்மத் நகர் இமாம் நாஃபி ஹஜரத் மற்றும் பல இமாம்கள் கலந்து கொண்டு நிறைவாக இமாம் அவர்களுடைய துஆவோடு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்

இவண்
மாநகர ஜமாஅத்துல் உலமா சபை &
மதர் ஃபைவ் ரோஸ் ட்ரஸ்ட்
தூத்துக்குடி

10 ஜூலை 2022

தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபையின் சிறப்பான ஏற்பாட்டில், 
பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி சுற்றுவட்டார சுமார் 20 மஹல்லாக்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஜமாத்தினர்கள் பெருநாள் தொழுகையில் சிறப்பாக கலந்து கொண்டனர்.

சில ஜமாத்துகளிலிருந்து தக்பீர் முழங்கிக் கொண்டே சாலைகளில் நடந்து வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலவி அல்ஹாபிழ் சா.முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தீ அவர்கள் தலைமையில், தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாபிழ் K.A.அப்துல் அழீம் மஸ்லஹி, இமாம் மௌலவி அல்ஹாபிழ் அ.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஆகியோர் குத்பா மற்றும் தொழுகையை சிறப்பாக நடத்தினர். 

உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு 
மக்கள் சலாம் கொடுத்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி பாசத்தை பகிர்ந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஜாமியா பள்ளி நிர்வாக சபையின் மேலாளர் மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திறன் பட செய்திருந்தனர்.
அல்ஹம்து லில்லாஹ்.

08 ஜூலை 2022

பெருநாள் தக்பீர்


பெருநாள் தக்பீர்
துல்ஹஜ் பிறை ஒன்பது சுபுஹு தொழுகையில் இருந்து பிறை 13 அசர்வரை 
ஒவ்வொரு வக்து தொழுகைக்குப் பிறகும் ஆண்கள் சப்தமிட்டும் பெண்கள் சத்தம் குறைத்தும் தக்பீர் சொல்ல வேண்டும் 

07 ஜூலை 2022

துல்ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி - மன்பவுஸ் ஸலாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் முத்துநகரின் முத்தான கல்விக்கூடம் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி மனாருல் ஹுதா மாணவர் மன்றத்தின் சார்பாக 
துல்ஹஜ் மாத சிறப்பு நிகழ்ச்சியாக, 
கிராஅத் போட்டி மற்றும் சிறப்பு கருத்தரங்கம் 
மிக சிறப்பாக  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!!

04 ஜூலை 2022

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஈதுல் அழ்ஹா என்னும் ஹஜ்ஜுப் பெருநாள்
தொழுகை அறிவிப்பு

தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற ஜமாஅத்தார்களுக்கு...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நிகழும் சங்கையான ஹிஜ்ரி 1443ம் ஆண்டு துல்ஹஜ் பிறை 10
(10.07.2022) ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை 8.00 மணிக்கு

பாளையங்கோட்டை ரோடு, ஈத்கா தோட்டத்தில்
இன்ஷா அல்லாஹ்
ஈதுப் பெருநாள் தொழுகை நடைபெறும்.

ஆகையால் ஜமாஅத்தார்கள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வருகை தந்து காலை 8.00 மணிக்கு தொழுகையை துவக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெருநாள் அன்று காலை மழை இருப்பின் பெருநாள் தொழுகை
அந்தந்த மஹல்லா பள்ளிவாசல்களில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.


தங்கள் அன்புள்ள
M.Y. ஹைதர் அலி M.Sc., (நிர்வாக அதிகாரி, வக்ஃபு கண்காணிப்பாளர்)
ஜாமிஆ பள்ளிவாசல், 
 31-33, வ.உ.சி. சாலை. தூத்துக்குடி - 2. 
போன்: 2326103. 4210787

குறிப்பு :
1. தக்பீருடைய நாட்கள் துல்ஹஜ் பிறை 9 (09.07.2022) சனிக்கிழமை  சுப்ஹூலிருந்து பிறை 13 (13.07.2022) புதன்கிழமை அஸர் வரை.

2. பெண்களுக்கு வழக்கம் போல் தெற்குபுதுத் தெருவில் உள்ள ஜாமிஆ சமுதாய நலக்கூடத்தில் (அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி) காலை 9.00 மணிக்கு, இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெறும்.

3.துல்ஹஜ் பிறை 9 (09.07.2022] சனிக்கிழமைஅரஃபா தினத்தில் நோன்பு பிடிப்பது சுன்னத்தாகும்.

 4. வழமைபோல் தொழுகைக்கு தார்பாய் விரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜமாத்தார்கள் தங்கள் இல்லங்களிலே ஒழு செய்து, தங்களது விரிப்புகளை தொழுகைக்கு கொண்டு வருவது ஏற்றமாக இருக்கும்.



01 ஜூலை 2022

மாதாந்திர பெண்கள் பயான் - ஜாமிஆ மஹல்லா - ஜூலை 2022

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 



மாதாந்திர பெண்கள் பயான் 

இன்ஷா அல்லாஹ் ,

நாள் : 02-07-2022 சனிக்கிழமை

நேரம் : அசர் முதல் மஃரிப் வரை

இடம் : அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி
(சமுதாய நல கூடம்)
 தெற்குப் புதுத் தெரு, தூத்துக்குடி.

20 ஜூன் 2022

அன்னை கதீஜா மக்தப் மதரஸா - தூத்துக்குடி



அன்னை கதீஜா மக்தப் மதரஸா
தெற்குப் புதுத் தெரு 
தூத்துக்குடி.
இமாம்கள் : 93843 36064, 
79048 30710


ஆண் பெண் இரு பாலருக்கும்.

சிறுமிகளுக்கு மாலை 3:30 - 6:00 மணி வரை 
சிறுவர்களுக்கு மாலை 5:30 - 6:00 மணி வரை 
  • தஜ்வீதுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி 
  • இனிமையான கிராஅத் பயிற்சி
  • மார்க்க சட்ட விளக்கங்கள் 
  • பாங்கு, இமாமத் பயிற்சி (ஆண்களுக்கு மட்டும்)
சுற்று வட்டார மக்கள் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை
31-33, வ.உ.சி. சாலை, 
தூத்துக்குடி - 2 
628002.